ஊரடங்கு உத்தரவை மீறிதாக இதுவரை 1.24 லட்சம் பேர் கைது: ரூ.38,54,144 அபராதம் வசூல்....தமிழக காவல்துறை தகவல்

சென்னை: இந்தியா உள்ளிட்ட 205 நாடுகளும் மேலாக கொரோனா வைரஸ் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,734 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 166 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் 473 பேர் குணமடைந்தனர். கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருவதால், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது.

பிரதமர் மோடி ஏற்கனவே 2 முறை டிவி.யில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். கடந்த மாதம் 22ம் தேதி மக்கள் சுய ஊரடங்கு பின்பற்ற வலியுறுத்தினார். அதற்கு 2 நாட்கள் கழித்து 24ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  வெளியிட்ட உத்தரவில் மார்ச் 31-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவித்தார். தொடர்ந்து, அன்றைய தினம் இரவு நாட்டு மக்களிடம் உரையாற்றி பிரதமர் மோடி, இன்று(மார்ச் 24) முதல் ஏப்ரல் 14-ம் தேதி வரை 21 நாட்கள்  ஊரடங்கு அமல்படுத்துவதாக அறிவித்தார்.  

இதனால், நாட்டு மக்கள் வீட்டில் முடங்கியுள்ளனர். அத்தியவாசிய பொருட்கள் விற்பனையாகும் பால், காய்கறி, இறைச்சி, மீன், மருத்தகம் உள்ளிட்ட கடைகளுகள் கட்டுப்பாடுடன் திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கிடையே,  பொதுமக்கள் வெளியை வராத வண்ணம் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவசியமின்றி வெளியை சுற்றித்திரியும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது விதமாக காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டு   வருகிறது. அவசியமின்றி சுற்றித்திரியும் பொதுமக்கள் மீது நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர்.  

இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 1.14 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றிய 1.24 லட்சம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 97,146 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறியவர்களிடம் ரூ.38,54,144 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: