சென்னை: கொரோனா தொற்றுக்கான சிகிச்சை, நெறிமுறைகளை வகுக்க சிறப்பு நிபுணர் குழு அமைக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சிகிச்சை மேம்படுத்துதல், அரசுக்கு ஆலோசனை வழங்குதல் உள்ளிட்டவைகளுக்காக 19 மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. சென்னை மருத்துவக்கல்லூரி பேராசிரியர் ரகுநந்தன் உள்பட 19 பேர் தமிழக அரசின் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.