டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்திவைப்பு

சென்னை: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு:  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் வரும் 25, 26ம் தேதி நடைபெறுவதாக அறிவித்திருந்த, தமிழ்நாடு தொழிற்சாலை பணிகளில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சி நிறுவனத்தில், உதவி இயக்குநர் மற்றும் உதவி கண்காணிப்பாளர் ஆகிய பதவிகளுக்கான தேர்வானது, கொரோனா வைரஸ் பரவலால் கடைபிடிக்க வேண்டிய சமூக விலகல் காரணமாகவும், தற்போது நிலவி வரும் அசாதாரணமான சூழ்நிலை காரணமாகவும், தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுகிறது. இத்தேர்வுகள் நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.

Related Stories: