புதுடெல்லி: இந்தியா வரும் 2022ல் விண்வெளிக்கு ககன்யான் விண்கலத்தில் ஆட்களை அனுப்பி ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்தியாவில் இருந்து விமானப்படை வீரர்கள் 4 பேர் தேர்வு செய்யப்பட்டு ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் உள்ள யு.ஏ காகரின் விண்வெளி ஆய்வு மையத்தில் கடந்த பிப்ரவரி முதல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்த மையம் கடந்த வாரம் திடீரென மூடப்பட்டது. இதனால் விண்வெளி வீரர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த பயிற்சி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.