புதுடெல்லி: ஜிஎஸ்டி ரீபண்ட் கோரி தாக்கல் செய்தவர்களில், 7,876 பேருக்கு ரீபண்ட் வழங்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஜிஎஸ்டி கோரிக்கைகளை பரிசீலனை செய்ய நாடு முழுவதும் சுமார் 1,750 வருமான வரி அதிகாரிகளுக்கு வீட்டில் இருந்து பணியாற்றுவதற்கான அனுமதியை ஜிஎஸ்டி நெட்வொர்க் நிறுவனம் வழங்கியுள்ளது. இதன்மூலம், ஊரடங்கு தொடங்கி முதல் 10 நாட்களில், ஜிஎஸ்டி பதிவு தொடர்பான 20,273 கோரிக்கைகள் பரிசீலனை செய்து தீர்வு காணப்பட்டுள்ளன.