நாகை மாவட்ட அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டவர் உயிரிழப்பு

நாகை: நாகை மாவட்ட அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டவர் உயிரிழந்தார். வேதாரண்யம் அருகே கத்திரிப்புலத்தைச் சேர்ந்த 70 வயது முதியவர் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தார். கொரோனா பரிசோதனைக்காக முதியவரின் ரத்த மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ள நிலையில் முடிவுகள் இன்னும் வரவில்லை. மூச்சுத்திணறலால் முதியவர் உயிரிழந்திருந்தாலும் கொரோனா நோயாளி உடல் அடக்கம் செய்வது போல் அடக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 

Related Stories: