திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூர் அருகே பானூர் பகுதியை சேர்ந்தவர் மம்மு. இவரது மகன் ஷப்னாஸ் (28). சவுதி யில் உள்ள மெதினாவில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த ஜனவரி 5ம் தேதி திருமணம் நடந்தது. இதற்காக ஊருக்கு வந்தவர் மார்ச் 3ம் தேதி மீண்டும் மெதினா சென்றார். அங்கு அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர் சிகிச்சை பலனளிக்காமல் அங்கேயே இறந்தார்.