கேரள புதுமாப்பிள்ளை கொரோனாவுக்கு சவுதியில் பலி

திருவனந்தபுரம்: கேரள  மாநிலம் கண்ணூர் அருகே பானூர் பகுதியை சேர்ந்தவர் மம்மு. இவரது மகன்  ஷப்னாஸ் (28). சவுதி யில் உள்ள மெதினாவில் பணிபுரிந்து வந்தார்.  இவருக்கு கடந்த ஜனவரி 5ம் தேதி திருமணம் நடந்தது. இதற்காக ஊருக்கு வந்தவர்  மார்ச் 3ம் தேதி மீண்டும் மெதினா சென்றார். அங்கு அவருக்கு கொரோனா பாதிப்பு  ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர்  சிகிச்சை பலனளிக்காமல் அங்கேயே இறந்தார்.

அவரது உடல் சவுதி அரேபியாவிலேயே  அடக்கம் செய்யப்பட்டது. இடுக்கி  மாவட்டம் தொடுபுழாவை சேர்ந்தவர் தங்கச்சன் (51). நியூயார்க் பெருநகர  போக்குவரத்து துறை அதிகாரியாக பணியாற்றி வந்த இவர் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில்  சிகிச்சை  பலனின்றி  இறந்தார். இதையடுத்து அமெரிக்காவில் மரணமடைந்த  மலையாளிகளின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: