சென்னை: தமிழகத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 571 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்ட 86 பேரில் 85 பேர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள். இதனிடையே 8 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 571 ஆக உயர்வு: பீலா ராஜேஷ்
- மரணவிசாரணை
- தமிழ்நாடு பாதிக்கப்பட்டவர்கள்
- பாதிக்கப்பட்டவர்களுக்கு
- பீலா ராஜேஷ் 86
- பீலா ராஜேஷ்
- தமிழ்நாடு