தேவாரம்: தேவாரம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள அடர்ந்த காடுகளில் பற்றிய தீயை அணைக்க நவீன உபகரணங்கள் இல்லாமல், வனத்துறையினர் உயிரை பணயம் வைத்து அணைத்து வருகின்றனர். தேனி மாவட்டம், தேவாரம் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தை ஒட்டி சாக்குலூத்து, அரிவாள்தீட்டிப்பாறை, பெரம்புவெட்டி உள்ளிட்ட அடர்ந்த காடுகளில் காட்டுத்தீ கொழுந்துவிட்டு எரிகிறது. இதனை அடுத்து உத்தமபாளையம் வனத்துறையினர் தீப்பற்றி எரிந்த இடங்களுக்கு குழுவாக சென்று நேற்று முன்தினம் தீயை அணைத்தனர். மேலும் தீ எரியும் பகுதிகளில் அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.