மாமல்லபுரம்: கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதன்காரணமாக பிரபல சுற்றுலாத் தலமான மாமல்லபுரம் கடற்கரை கோயில் வெறிச்சோடி காணப்படுகிறது. மாமல்லபுரம் அடுத்த மணமை, தர்காஸ், வடகடம்பாடி, கடம்பாடி மற்றும் காரணை உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள், தர்பூசணி பயிரிட்டுள்ளனர். ஒருசிலர் வட்டிக்கு கடன் வாங்கியும் நகைகளை அடகு வைத்தும் தர்பூசணிகளை பயிரிட்டுள்ளனர். தற்போது தர்பூசணி பழங்கள் விற்பனைக்கு தயார்நிலையில் உள்ளன.