நெல்லை: கொரோனா பரவலில் இந்தியா மூன்றாவது கட்டத்தை எட்டி உள்ளது. இந்நிலையில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரிய கோயில்களில் நவக்கிரக ராகு - கேது, சனி பகவான் சன்னதிகளில் அஷ்டோத்ரசத நாமாவளி சிறப்பு வழிபாடு நடத்த அறநிலையத்துறை உத்தரவிட்டது. இதன்படி நெல்லையப்பர் கோயிலில் நேற்று காலையில் நவக்கிர சன்னதியில் ராகு - கேது சனி பகவான் சன்னதிகளில் அஷ்டோத்ர சத நாமாவளி சிறப்பு ஹோமங்கள், சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது.