ஆபத்தில் தமிழகம் .. டெல்லி மதவழிபாட்டில் பங்கேற்று தமிழகம் வந்த 616 பேர் எங்கே.. செல்போனும் ஸ்விட்ச் ஆப்.. தீவிர தேடுதலில் அதிகாரிகள்!!!

டெல்லி : டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களை கண்டுபிடிக்க 50 தனிப்படைகள் அமைக்கப்ட்டுள்ளது.

டெல்லியில் மார்ச் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை தப்லீகீ- ஜமாத் என்ற அமைப்பினர் ஒரு வழிபாட்டு கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் மாநாட்டில் பங்கேற்று விட்டு, தெலங்கானா, தமிழ்நாடு, அந்தமான் நிக்கோபார் தீவுகள் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு திரும்பியவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

தமிழகத்தில் நேற்று மட்டும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 57 அதிகரித்து 124ஆக உயர்ந்தது. புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்ட 57 பேரில் 45 பேர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். மேலும் பீலா ராஜேஷ் கூறுகையில்,டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்ற 1,131 பேரில் 515 பேர் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளனர். 616 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. தொடர்பு கொள்ள முடியாதவர்கள் தாமாக முன்வந்து மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.

சிலரை தொடர்பு கொண்ட நிலையில் பலரை மாவட்ட நிர்வாகத்தால் தொடர்பு கொள்ள முடியவில்லை. செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துள்ளனர். உளவுத் துறை மூலமாக கணக்கெடுப்பு எடுத்து வருகிறோம், எனத் தெரிவித்திருந்தார்.மேலும் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். உரிய நேரத்தில் சிகிச்சை எடுத்துக் கொண்டால் நோய்த் தொற்று  ஏற்படுவதை தடுக்க இயலும் என்றும்  சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்த நிலையில் மீதமுள்ளவர்களை கண்டறிய 50 தனிப்படைகள் அமைக்கப்ட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: