ஜெய்ப்பூர்: பிரம்மகுமாரிகள் அமைப்பின் தலைவி தாதி ஜானகி தனது 104 வயதில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பெண்களால் நடத்தப்படும் உலகின் மிகப்பெரிய ஆன்மீக அமைப்பாக பிரம்மகுமாரிகள் சன்ஸ்தன் விளங்குகிறது. 46 ஆயிரம் பெண்கள் உட்பட 20 லட்சம் பேர் இந்த அமைப்புடன் தொடர்பில் உள்ளனர். இந்த அமைப்பின் தலைமை நிர்வாகியாக இருந்தவர் ராஜ்யோகினி தாதி ஜானகி (104). இவர் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் கடந்த 1916ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி பிறந்தவர். தனது 21வது வயதில் ஆன்மீக பாதையை நாடினார். கடந்த 1970ம் ஆண்டு மேற்கத்திய நாடுகளுக்கு சென்றார். உலகம் முழுவதும் 140 நாடுகளில் சேவை மையங்களை நிறுவினார். இந்த அமைப்பின் 8 ஆயிரம் மையங்களில் பெண்கள்தான் தலைமை நிர்வாகிகள். தாதி ஜானகியை தூய்மை இந்திய திட்டத்தின் தூதுவராக மத்திய அரசு நியமித்தது.
கடந்த 2 மாதங்களாக இவர் சுவாசப் பிரச்னை மற்றும் வயிற்று கோளாறால் அவதிப்பட்டு வந்தார்.