டெல்லி: உள்நாட்டு விமானங்கள் இயங்குவதற்கான தடையை ஏப்ரல்14-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் படிப்படியாக பரவி வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கையால் விமான சேவைகள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 24,071 ஆக உயர்ந்துள்ளது. 5,31,799 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு 17 பேர் உயிரிழந்துள்ளனர். 724 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. தற்போது உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸ் நோயை உயிர்கொல்லி தோற்று நோய் என அறிவித்துள்ளது.