பெங்களூர் :கர்நாடகாவில் ஊரடங்கு உத்தரவை மீறி மசூதி ஒன்றில் தொழுகை நடத்திய முஸ்லீம்களை காவல்துறையினர் தடியடி நடத்தி விரட்டி அடித்த காட்சி சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆதலால் அத்தியாவசிய தேவைகள் இன்றி மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்று அவ்வப்போது மாநில, மத்திய அரசுகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். கொரோனா பரவலை தடுக்க கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் மூடப்பட்டுள்ளன.