புதுச்சேரியில் பொதுமக்களை திரட்டி காய்கறி விநியோகித்த காங். எம்எல்ஏ மீது வழக்கு

புதுச்சேரி: புதுவை நெல்லித்தோப்பு தொகுதியில்  ஊரடங்கு உத்தரவை மீறி இரவு நேரத்தில் பொதுமக்களை ஒரே இடத்துக்கு வரவழைத்து  காய்கறிகளை காங்கிரஸ் எம்எல்ஏ ஜான்குமார்  விநியோகம் செய்வதாக சமூக வலைதளத்தில் தகவல் பரவியது. இதுதொடர்பாக அதிகாரிகள் ஆய்வு நடத்தியதில், அவர் காய்கறி விநியோகம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, பேரிடர் மேலாண்மை சட்ட விதிப்படி எம்எல்ஏ ஜான்குமார்,  ஊழியர் வேலு ஆகியோர் மீது  3 பிரிவுகளில் உருளையன்பேட்டை போலீசார்  நேற்று முன்தினம் இரவு வழக்குபதிவு செய்துள்ளனர்.

Related Stories: