சென்னை : மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா ஆய்வு மையம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார்.கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மருத்துவமனைகளில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்த தேவையான நிதி ஒதுக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வருபவர்களை ஆய்வு செய்து தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும் என நேற்று மாலை மத்திய அரசு அறிவித்திருந்தது. இதனிடையே 23 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் முதல் பலியாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மதுரையை சேர்ந்தவர் உயிரிழந்துள்ளார்.
மதுரை ராஜாஜி மருத்துவ கல்லூரியில் கொரோனா ஆய்வு மையம்… தமிழகத்தில் 8வது பரிசோதனை மையமாக இது செயல்படும் : அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு
- கொரோனா ஆராய்ச்சி மையம்
- மதுரை
- ராஜாஜி மருத்துவக் கல்லூரி
- Vijayabaskar
- சோதனை மையம்
- தமிழ்நாடு
- மருத்துவமனைகளில்
- தம்பரம் சானிடேரியம்
- மதுரை டோப்பூர்