திருச்செந்தூர்: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கோயில்கள் மூடப்பட்டு உள்ளதால் திருச்செந்தூர் பஸ் நிலையத்தில் காதல் ஜோடி தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர். வாட்ஸ்அப்பில் வைரலாக பரவும் இந்த வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கோயில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள் வருகிற 31ம் தேதி வரை பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் திருச்செந்தூர் பஸ் நிலையம் அருகிலுள்ள விநாயகர் கோயில் முன்பு சென்னையை சேர்ந்த காதல் ஜோடி திருமணம் செய்து கொண்ட காட்சி, வாட்ஸ்அப்பில் வைரலாக பரவி வருகிறது.