சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே, வினத்தாள் மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க அரசு தேர்வுகள் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வினாத்தாள் பாதுகாப்பு தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: ஒத்தி வைக்கப்பட்டுள்ள பத்தாம் வகுப்பு தேர்வுக்கான புதிய அட்டவணை குறித்த விவரம் அரசுத் தேர்வுகள் இயக்ககம் பின்னர் அறிவிக்கும்.