வேலூர்: வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள நோயாளிகளை பார்வையிட தடை விதித்து ,மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு விலகும் வரை நோயாளிகளை பார்க்க ஒருவருக்கு மட்டுமே அனுமதி. அண்மையில் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் தங்கள் முகவரியை சிறப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கவும் வலியுறுத்தியுள்ளார்.