டெல்லி: கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் 75 மாவட்டங்களின் எல்லைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி நாட்டு மக்களை பீதியடையவைத்துள்ளது. பிரதமர் மோடி வேண்டுகோள்படி கொரோனாவை கட்டுப்படுத்த இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் சுய ஊரடங்கு கடைபிடித்து வருகின்றனர். இதனிடையே பல்வேறு மாநிலங்களில் சுய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் சுய ஊரடங்கு அடைப்பிடிக்கப்பட்டு வருவதால் நாடு முழுவதும் 75 மாவட்டங்களின் எல்லைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.