ஊத்துக்கோட்டை: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊத்துக்கோட்டை பணிமனையில் இருந்து வெளியூர் செல்லும் 25 பஸ்களின் சேவை நிறுத்தப்பட்டது. ஊத்துக்கோட்டை பேருந்து பணிமனையில் இருந்து கடலூர், திருச்சி, காஞ்சிபுரம், பாண்டிச்சேரி, ஆந்திரா மாநிலம் நெல்லூர், புத்தூர், திருப்பதி மற்றும் சென்னை, செங்குன்றம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளுக்கு 37 பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 12 பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டு மீதம் உள்ள 25 பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன.