பணகுடி : கூட்டப்புளி மீனவர் வலையில் 1.5டன் ராட்சத சுறா சிக்கியது. நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள கடற்கரையோர கிராமமான கூட்டப்புளியை சேர்ந்தவர் வில்சன். இவரது படகில் வில்சன் உள்பட 4 பேர் நேற்று வழக்கம்போல் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது அவரது வலையில் பெரிய எடையிலான மீன் சிக்கியது. வலையை இழுக்க முடியாததால், அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சக மீனவர்களிடம் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் உதவியுடன் வலையை கரைக்கு இழுத்து வந்தனர்.