உணவு டெலிவரி செய்பவரை தாக்கி செல்போன் பறிப்பு

பெரம்பூர்: கொடுங்கையூர், 1வது தெருவை சேர்ந்தவர் வினோத்குமார் (30). இவர் ஆன்லைன் நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு உணவு டெலிவரி செய்வதற்காக கொளத்தூர் வடக்குமாட தெரு வழியாக பைக்கில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக முன்னாள் சென்ற சைக்கிள் மீது மோதினார்.  இதனால், இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த வழியாக வந்த 4 பேர், சைக்கிள் ஓட்டி வந்த நபருக்கு ஆதரவாக பேசி, வினோத்குமாரை அடித்து உதைத்து செல்போனை பறித்துக்கொண்டு தப்பினர். இதில் பலத்த காயமடைந்த வினோத்குமாரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து வினோத்குமார் கொடுத்த புகாரின்படி, ராஜமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: