பேரவையில் நேற்று சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு காங்கேயம் தனியரசு(தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை) பேசியதாவது: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய பல்வேறு முயற்சிகள் எடுத்தும் இதுவரை அவர்களுக்கு விடுதலை கிடைக்கவில்லை. அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர் சி.வி.சண்முகம்: 7 பேரின் விடுதலை குறித்து முடிவு எடுக்க கவர்னருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கவர்னரின் செயலாளர் அரசுக்கு அனுப்பிய கடிதத்தில், ‘ராஜிவ்காந்தி கொலை வழக்கில் பல்நோக்கு விசாரணை அமைப்பு (சிபிஐ மத்திய உளவுத்துறை, நுண்ணறிவு பிரிவு) சதி திட்டஙகள் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.