நாமக்கல்: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் நாளை லாரிகள் ஓடாது என மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயலாளர் வாங்கிலி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்த, மாநில அரசு பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது. நாளை (22ம் தேதி) இந்தியா முழுவதும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பால் பல்வேறு மாநிலங்களில் பெரிய தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.