டெல்லி: கொரோனா வைரஸ் காரணமாக சிவில் சர்வீஸ் நேர்காணல் தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஒத்திவைத்துள்ளது. மத்திய அரசு தேர்வாணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிவில் சர்வீஸ் தேர்வு நடைபெறுவது வழக்கம். சிவில் சர்வீஸ் பணி தேர்வுக்கு மொத்தம் 796 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டப்படிப்பு முடித்த விண்ணப்பதாரர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். சிவில் சர்வீஸ் தேர்வானது மூன்று கட்டங்களில் நடைபெறும். அவை முதனிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்காணல் ஆகும். விண்ணப்பதாரர்கள் இதில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தற்போது கொரோனா வைரஸ் காரணமாக சிவில் சர்வீஸ் நேர்காணல் தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஒத்திவைத்துள்ளது. சீனாவின் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கு அச்சுறுத்தலாக உருவாகியுள்ளது.