ராஜபாளையம்: ராஜபாளையத்தில் கட்டப்பட்ட பெண்கள் கழிப்பிடம் திறக்கப்படாமல் பூட்டியே கிடப்பதால் பெண்கள் சிரமமடைந்து வருகின்றனர்.
ராஜபாளையம் நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கடந்த 2015-16ம் நிதி ஆண்டில் பல லட்சம் செலவில் பெண்களுக்கான கழிப்பிடம் மலையடிப்பட்டி 40 அடி சாலையில் கட்டப்பட்டது.