சென்னை: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர், இருங்காலூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (40). இவர், மதுரையில் தங்கி நெல் கதிர் அறுவை வாகன தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் மதுரை மாவட்டம், ஒத்தக்கடை அருகே ராஜாக்கூர் பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் கொரோனா வைரஸ் பாதித்த 47 பேரை தங்க வைத்து சிகிச்சை அளித்து வருவதாகவும், அதனை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டார்.