வாஷிங்டன்: அமெரிக்காவின் ஐம்பது மாகாணங்களிலும் கொரோனா வைரஸ் பரவி இருக்கிறது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டியில் தெரிவித்துள்ளார். ஒரு ஆண்டு நீடிக்கும் சோதனையை, சில நாட்களிலேயே முடித்திருக்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார். மருந்து தயாரிப்பு மற்றும் மருத்துவ தொழில் நிறுவனங்களுடன் தொடர்ந்து பேசி வருகிறோம் என்றும் ஏப்ரல் இறுதிக்குள் கொரோனா வைரசுக்கான மருந்து தயாராகி விடும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்ள மக்களுக்கு 15 அறிவுரைகள் வழங்கியுள்ளோம் என்றும் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்பை கோவிட் 19 வைரஸ் ஏற்படுத்தி இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.