நாமக்கல்: கொரோனா பீதி எதிரொலியாக நாமக்கல் நரசிம்ம சுவாமி, ரங்கநாதர் கோயில்கள் பூட்டப்பட்டுள்ளது. மலைக்கோட்டைக்கு செல்லவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மலைக்கோட்டையொட்டி, நரசிம்மசுவாமி மற்றும் ரங்கநாதர் கோயில்கள் அமைந்துள்ளன. பிரசித்தி பெற்ற இந்த கோயில்களுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்து செல்கிறார்கள். பெருமாள் சுவாமி நரசிம்மசுவாமி கோயிலில் உட்காந்த கோலத்திலும், ரங்கநாதர் கோயிலில் அனந்தசயன கோலத்திலும், மலைமீது உள்ள பெருமாள் கோயிலில் நின்ற கோலத்திலும் காட்சி அளிக்கிறார். தமிழகத்தில் உள்ள கோயில்களில் நாமக்கல் கோயில்களில் மட்டும் தான் இப்படி 3 வகை அவதாரத்தில் பெருமாள் காட்சி அளிக்கிறார்.