தேனி: தேனி மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் பெருமளவில் குறைந்திருப்பதால் காய்கறி சாகுபடி செய்யக்கூட போதிய தண்ணீர் இல்லை என விவசாயிகள் தெரிவித்தனர். தேனி மாவட்டத்தில் கண்மாய்கள் நிரம்பி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. கடந்த ஆண்டு பெய்த மழையில் கூட 15 சதவீத கண்மாய்களில் மட்டுமே தண்ணீர் ஓரளவு இருந்தது. மற்ற கண்மாய்களுக்கு தண்ணீர் வரவில்லை. மாவட்டத்தில் 50 ஆயிரம் எக்டேருக்கும் அதிகமான நிலப்பரப்பில் தோட்டக்கலை சாகுபடி நடந்து வருகிறது. மாவட்டத்தில் உள்ள கிணறுகள் முற்றிலும் வறண்டுள்ள நிலையில், போர்வெல்களிலும் நீர்மட்டம் சரிந்துள்ளது. மாவட்டத்தின் சராசரி நிலத்தடி நீர்மட்டம் ஆயிரம் அடிக்கு கீழே சென்று விட்டது.