சென்னை: துபாயில் இருந்து நூதன முறையில் தங்கம் கடத்தி வந்த ஆசாமியை கைது செய்து அவரிடமிருந்து 27.3 லட்சம் தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று காலை 8.30 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சென்னையை சேர்ந்த காதர் மொய்தீன் (36) என்பவர் சுற்றுலா பயணியாக துபாய்க்கு சென்றுவிட்டு திரும்பி வந்தார். இவர் தான், சுங்கத்தீர்வை செலுத்தும் பொருள் எதுவும் இல்லை என கூறி கீரின் சேனல் வழியாக வெளியே செல்ல முயன்றார். அப்போது, அவர் நடந்து சென்றபோது ஏதோ உராய்வது போன்ற சத்தம் கேட்டது.