ஈரோடு: ஈரோடு அரசு மருத்துவமனையில் பூட்டிக்கிடக்கும் கழிவறைகளால் வெளிநோயாளிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்ட தந்தை பெரியார் அரசு மருத்துவமனைக்கு ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி அருகாமையில் உள்ள சேலம், நாமக்கல், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். 800க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் தங்கி உள்ளனர். இது தவிர நாள் ஒன்றுக்கு 1000க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.உள் நோயாளிகளுக்கு அந்தந்த வார்டுகளில் கழிப்பறைகள் உள்ளன. ஆனால் வெளிநோயாளிகளுக்கு என்று அரசு மருத்துவமனை காவல்நிலையம் அருகே ஆண்கள், பெண்களுக்கு தலா 4 கழிவறைகள் வீதம் மொத்தம் 8 கழிவறைகள் கட்டப்பட்டிருந்தது. இதை முறையாக பராமரிக்கப்படாமல், கதவுகள் உடைந்தும், குழாய்களில் தண்ணீர் உடைப்பு ஏற்பட்டதாலும் திடீரென்று மருத்துவமனை நிர்வாகம் கழிவறைகளுக்கு பூட்டு போட்டுவிட்டது.