வேலூர்: உலககெங்கும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா பீதி இந்தியாவை தேசிய பேரிடராக அறிவிக்கும் நிலைக்கு தள்ளியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்கள் கண்காணிப்பிலும், சிகிச்சையிலும் வைக்கப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் சுற்றுலா தலங்களில் கூட்டம் குறைந்துள்ளது. தினமும் பல்லாயிரக்கணகானவர்கள் வந்து தரிசனம் செய்யும் ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயில் பக்தர்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையமும் பயணிகள் கூட்டமின்றி வெறிச்சோடியுள்ளது.
அதேபோல் வேலூர் மாவட்டத்தில் வேலூர் கோட்டை மற்றும் ஜலகண்டேஸ்வரர் கோயில், அமிர்தி வனச்சரணாலயம், திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலை உட்பட சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்லும் அனைத்து இடங்களும் சுற்றுலா பயணிகள் வரத்து குறைந்து வெறிச்சோடி காணப்படுகிறது.