பாலக்கோடு: பாலக்கோடு அருகே புறம்போக்கு நிலத்தில் கட்டிய, 66 வீடுகள் அதிகாரிகள் முன்னிலையில் பொக்லைன் மூலம் இடித்து அகற்றப்பட்டது. பாலக்கோடு அருகே பஞ்சப்பள்ளி பட்டாபி நகர் பகுதியில், சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் கல்லாங்குத்து எனும், அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த பகுதியில் ஏற்கனவே 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு அரசு சார்பில் பட்டா வழங்கப்பட்டது. மேலும் கடந்த 3ஆண்டுகளாக ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி, காடுசெட்டிபட்டி ஆகிய பகுதியை சேர்ந்த, 66 நபர்கள் குடிசை அமைத்து வசித்து வந்தனர். இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில், இந்த இடத்தை காலி செய்யும்படி பலமுறை எச்சரிக்கை விடுத்து வந்தனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு, தாசில்தார் ராஜா அவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் நடவடிக்கை எடுப்பதில்லை என்று கூறியுள்ளனர்.