கோவை: ஜாதி, மதத்துக்கு அப்பாற்பட்ட கட்சி பா.ஜ’’ என்று என்று மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்தார். கோவை மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கோவை மண்டல பா.ஜ. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பா.ஜ. மாநில தலைவர் எல்.முருகன் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். அவரை, முன்னாள் எம்.பி. சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமையில் பா.ஜ.க.வினர் வரவேற்றனர். பின்னர், மாநில தலைவர் எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது: கோவையில் இந்து இயக்கங்களை சேர்ந்த ஆனந்த், சூரிய பிரகாஷ் ஆகியோர் தீவிரவாதிகளால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்களில் ஒரு சிலரை மட்டுமே காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தொடர்புடைய அனைவரையும் கைது செய்யவில்லை.