மாநில தலைவர் முருகன் தகவல்: ஜாதி, மதத்துக்கு அப்பாற்பட்ட கட்சி பாஜ

கோவை: ஜாதி, மதத்துக்கு அப்பாற்பட்ட கட்சி பா.ஜ’’ என்று என்று மாநில தலைவர் எல்.முருகன்  தெரிவித்தார். கோவை மாவட்ட பா.ஜ.க.  அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கோவை மண்டல பா.ஜ.   நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பா.ஜ.  மாநில தலைவர் எல்.முருகன் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். அவரை, முன்னாள் எம்.பி.  சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமையில் பா.ஜ.க.வினர் வரவேற்றனர். பின்னர், மாநில  தலைவர் எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது: கோவையில் இந்து இயக்கங்களை சேர்ந்த  ஆனந்த், சூரிய பிரகாஷ் ஆகியோர் தீவிரவாதிகளால் கடுமையாக  தாக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்களில் ஒரு சிலரை மட்டுமே காவல் துறையினர்  கைது செய்துள்ளனர். தொடர்புடைய அனைவரையும் கைது செய்யவில்லை.

இது போன்ற  தாக்குதல்கள் தொடர்ந்து நடக்கிறது. இதை தடுக்க காவல் துறையினர் கடுமையான  நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவையில் அமைதி நிலவ வேண்டும். அதை தடுக்க  நினைக்கும் இயக்கத்தை சேர்ந்தவர்களை கைது செய்ய வேண்டும். ஏற்கனவே தமிழகத்தில் பா.ஜ.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்கள்   இருந்துள்ளனர். அதே நிலையை மீண்டும் கொண்டு வரவும், கட்சியை வளர்க்க, ஒன்றாக பணி செய்ய உள்ளோம். பல எதிர்க்கட்சிகள் பா.ஜ.க.வை ஒரு  குறிப்பிட்ட மதம் மற்றும் ஜாதிக்குள் அடக்கி வருகிறது. ஆனால் அது  உண்மையல்ல. பா.ஜ.க, ஜாதி, மதத்துக்கு அப்பாற்பட்ட கட்சியாகும். இவ்வாறு முருகன் கூறினார்.

Related Stories: