மதுரை: கொரோனா வைரஸ் நோய் தாக்கம் உலகெங்கும் மக்களை அச்சுறுத்தி வருகிறது. ஏராளமானோர் பாதிப்புக்குளாகி பலியாகி உள்ளனர். இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு காய்ச்சல், சளி பாதிப்புடன் வரும் பக்தர்களுக்கு முகக்கவசம் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்களை அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல அறிவுறுத்தும்படி கோயில் ஊழியர்களுக்கு உத்தரவிட்டப்பட்டுள்ளது.