புதுடெல்லி: இளம் தலைவர்களுக்கு பதவிகள் வழங்கப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் பதவி கிடைக்காததால், ஜோதிராதித்யா சிந்தியா அதிருப்தியில் இருந்து வந்தார். சமீபத்தில் ்அவர் பாஜ,வில் இணைந்தார். மேலும், அவரது ஆதரவு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்22 பேர் பதவியை ராஜினாமா செய்துள்ளதால், மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேச காங்கிரசில் வீசிய இந்த புயலால் காங்கிரஸ் அதிர்ச்சி அடைந்துள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா டெல்லியில் நேற்று அளித்த பேட்டி: திறமையானவர்கள் இடம் பெயர்வது காங்கிரசில் நடக்கவில்லை.