திருவில்லிபுத்தூர்: தேர்வு நேரம் என்பதால் ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரை கீரை விற்பனை சூடுபிடித்துள்ளது. கீரைகளில் சிறுகீரை, அரைக்கீரை, அகத்திக் கீரை, மணத்தக்காளி கீரை, தண்டுக்கீரை, வெந்தயக்கீரை, முருங்கைக்கீரை என பலவகையான கீரைகள் உண்டு. ஒவ்வொரு கீரையும் மருத்துவ குணம் வாய்ந்தது. வல்லாரை கீரைக்கு ஞாபக சக்தியை அதிகரிக்கும் தன்மை உண்டு. தற்போது அரசு பொதுத்தேர்வு நடந்து வருவதால் ஞாபக சக்தியை அதிகரிக்க பெரும்பாலான பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு அன்றாட உணவில் வல்லாரை கீரை கொடுத்து வருகின்றனர்.