துருக்கி : தனது உயிரை பெருட்படுத்தாமல் எண்ணைய் கிணற்றில் சிக்கிய நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. தற்போதைய காலக்கட்டத்தில் ஐந்தறிவு ஜீவன்கள் உயிருக்கு ஆபத்தான நிலைமையில் இருந்தால் ஆறறிவு ஜீவன்கள் உடனே உதவி செய்து காப்பாற்றுவது மனித நேயமாகும். அவை தற்போது மக்களிடையே பெருகி வருகிறது. அந்த வகையில் துருக்கியில் தியார்பகீர் மாநிலத்தின் தென்மேற்கு பகுதியில் எனிஸ் டேய்லன் என்ற 10வயது சிறுவன் சாலையில் சென்று கொண்டிருந்தான். அப்போது நாய்க்குட்டியின் அலறல் சத்தம் கேட்டது.