விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் அரசு ஒப்பந்ததாரர் பஷிர்உல்லா வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தில் வீடு கட்டியதில் கோடிக்கணக்கில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முறைகேடு தொடர்பாக கடலூர் மாவட்டத்திலும் 3 இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடலூரில் அரசு உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமார் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Related Stories: