புதுடெல்லி: யெஸ் வங்கியில் ரூ7,250 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்க உள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. வராக்கடன் பிரச்னையால் யெஸ் வங்கி கடும் நிதி நெருக்கடிக்கு ஆளானது. மூலதன நிதி திரட்டும் முயற்சிகளும் பலன் தரவில்லை. இதை தொடர்ந்து இந்த வங்கியை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் எடுத்தது. வாடிக்கையாளர்கள் ரூ50,000க்கு மேல் பணம் எடுக்க கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்த வங்கியை நெருக்கடியில் இருந்து மீட்கும் முயற்சியில் ரிசர்வ் வங்கி இறங்கியுள்ளது. இதன்படி, செபியிடம் பாரத ஸ்டேட் வங்கி நேற்று அளித்துள்ள தகவலின்படி, விதிமுறைகளின்படி, யெஸ் வங்கியில் 49 சதவீதத்துக்கு உட்பட்ட பங்குகளை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.