புதுடெல்லி: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று கூறியதாவது: ஈரானில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால், அங்கு 6,000 இந்தியர்கள் பீதியில் உள்ளனர். இதில் 300 மாணவர்கள், மகாராஷ்டிரா மற்றும் காஷ்மீரை சேர்ந்த 1100 யாத்திரீகர்களும் அடங்குவர். ஈரானின் குவாம் பகுதியில் சிக்கி தவிக்கும் இந்திய யாத்திரீகர்களை மீட்பதில் வெளியுறவுத் துறை முதல் கவனம் செலுத்தி வருகிறது. ஏற்கனவே, அங்கிருந்து 58 இந்தியர்கள் மீட்டு வரப்பட்டுள்ளனர். மற்றவர்களை அழைத்து வர, வெளியுறவு அமைச்சகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அங்குள்ள இந்தியர்களுக்கு மருத்துவ சோதனை செய்யப்பட்டதும் உடனடியாக நாடு திரும்ப. வர்த்தக விமானங்களை இயக்கப்படும்.