புதுடெல்லி: ‘அரசியல் எதிர்காலம் குறித்த சந்தேகத்தால், தனது கொள்கையை ஜோதிராதித்யா சிந்தியா மறந்து விட்டார்,’’ என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் நேற்று அளித்த பேட்டி:ஜோதிராதித்யா சிந்தியா சொல்வதற்கும், அவர் மனதில் உள்ளதற்கும் வித்தியாசம் உள்ளது. சிந்தியா எனது பழைய நண்பர். அரசியல் எதிர்காலம் குறித்த அச்சம், சந்தேகத்தால், அவர் தனது கொள்கையை மறந்துவிட்டார். பா.ஜ கட்சியில் சிந்தியாவுக்கு மரியாதையும் கிடைக்காது, திருப்தியும் ஏற்படாது. பங்குச் சந்தையில் என்ன நடக்கிறது என நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.