திருவலம் பேரூராட்சியில் பேக்கரி கடையில் 4.6 கிலோ பிளாஸ்டிக் கவர் பறிமுதல்

திருவலம்: திருவலம் பேரூராட்சியில் பேக்கரி கடையில் பதுக்கிய 4.6 கிலோ பிளாஸ்டிக் கவர்களை செயல் அலுவலர் நேற்று பறிமுதல் செய்து, ₹5ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டார். காட்பாடி தாலுகா திருவலம் பேரூராட்சியில் முற்றிலும் பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க கலெக்டர் உத்தரவின் பேரில் பேரூராட்சி செயல் அலுவலர் சு.வெங்கடேசன், இளநிலை உதவியாளர் துரை மற்றும் பணியாளர்கள் பேரூராட்சிக்கு உட்பட்ட கடைகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, பொன்னை கூட்ரோடு பகுதியில் உள்ள தனியார் பேக்கரி  கடையில் பதுக்கி வைத்திருந்த பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்து, அபராத  தொகையாக 5 ஆயிரம்  வசூல் செய்து எச்சரித்து நடவடிக்கை எடுத்தனர்.

Related Stories: