வேலூர்: வேலூர் மாநகராட்சி எல்லை பகுதிகளை நிர்ணயிக்கும் வகையில் நவீன முறையில் அளவீடு செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. வேலூர் நகராட்சி கடந்த 2008ம் ஆண்டு மாநகராட்சியாக உயர்த்தப்பட்டது. தொடர்ந்து 2011ல் காந்தி நகர், கழிஞ்சூர், பழைய காட்பாடி, தொரப்பாடி, சேண்பாக்கம், அல்லாபுரம் என 6 பேரூராட்சிகளுடன், கொணவட்டம், காங்கேயநல்லூர், விருதம்பட்டு, அலமேலுமங்காபுரம், அரியூர், சித்தேரி, விருபாட்சிபுரம், இடையன்சாத்து, பலவன்சாத்து ஆகிய ஊராட்சிகளுடன் முறையாக மாநகராட்சி எல்லைகளுடன் செயல்பட தொடங்கியது. இந்நிலையில், மாநகராட்சியில் அனைத்து பகுதிகளிலும் முறையான வரிவிதிப்பை மேற்கொள்வதுடன், அடிப்படை பணிகளை செய்து முடிக்கும் வகையில் முறையாக அளவீடு செய்யும் பணி இதுவரை நடத்தப்படவில்லை.