புதுடெல்லி: மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்பில் சேர்வதற்கான ஜே.இ.இ. நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் நிறைவுபெறுகிறது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஐ.ஐ.எஸ்.சி., என்.ஐ.டி., ஆகிய கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஜே.இ.இ. என்ற ஒருங்கிணைந்த நுழைவு தேர்வை ஆண்டுதோறும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. பிளஸ் 2 முடித்த மாணவர்கள், மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஐ.ஐ.எஸ்.சி., என்.ஐ.டி., போன்ற நிறுவனங்களில் சேர்வதற்கு, இந்த நுழைவு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டு இரண்டு முறை நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது.