கூடலூர்: ‘கொரோனா’ பீதியால் தேக்கடியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மார்ச் 31 வரை மூடப்படுவதாக கேரள வனத்துறை அறிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் கொரோனா பராவுவதை தடுக்க அம்மாநில அரசு கடுமையான அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, பெரியார் புலிகள் காப்பகத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களையும் வரும் 31ம் தேதி வரை மூடும்படி கேரள முதன்மை வனத்துறை தலைமை வனவிலங்கு வார்டன் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து பெரியாறு புலிகள் சரணாலய இணை இயக்குநர் சில்பா வி குமார் தேக்கடி படகு சவாரி, சுற்றுலா தங்குமிடங்கள், கெவி சஃபாரி மற்றும் பெரியார் புலிகள் சரணாலயப்பகுதியில் உள்ள முகாம்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளார்.