நெல்லை: கோடை காலத்தை முன்னிட்டு நாகர்கோவில்- தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தாம்பரம் - நாகர்கோவில் இடையே சிறப்பு கட்டண ரயில்கள்(எண்.06005) புதன்கிழமை தோறும் இயக்கப்பட உள்ளன. வரும் ஏப்ரல்8,15,22,29, மே 6,13,20,27, ஜூன்3,10,17,24 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் இந்த ரயில்கள் தாம்பரத்தில் இருந்து பிற்பகல் 4.45 மணிக்கு புறப்படும். நெல்லை வழியாக மறுநாள் வியாழக்கிழமை காலை 5.25 மணிக்கு நாகர்கோவில் போய் சேரும். நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு வியாழன் தோறும் சிறப்பு கட்டண ரயில்கள் (எண்.06006) இயக்கப்பட உள்ளன.